பேரின்ப வீட்டைப் பெற
இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு - குறள்
பிறப்பினை நீக்கிப் பேரின்ப வீட்டை அளிப்பது மெய்யுணர்வாகும். அஞ்ஞானமாகிய இருளும் மயக்கம் தரும் மருளும் நீங்கினால் பேரின்பமாகும்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் இதனைப் பார்க்கலாம். முகம் என்ற கட்டமைப்பில் கண்,காது,மூக்கு வாய் என்று நான்கு புலன்களும் ,பொறிகளும் உள்ளது.கண்ணைக் கொண்டு உலகியல் பொருள் அனைத்தையும் காணலாம். நம் கண்ணைக் கொண்டு நம் கண்,காது,மூக்கு ,வாய் இவற்றை பார்ப்பதற்கு ஒரு கண்ணாடி தேவைப்படுகின்றது, கண்ணிற்கு மிக அருகில் இருக்கும். காதைப் பார்ப்பதற்கு ஒரு உப பொருள் தேவைப்படுகின்றது. அதுவும் கீறல் இல்லாது செம்மையாக, ரசம் பூசியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளது உள்ளபடி காட்டும் அக்கண்ணாடி. ஐந்து புலன்களின் செயல்பாடுகளையும் அறிந்து கொண்டால் மட்டும் அறிவு பெற்று விட்டோம் என நினைக்கக் கூடாது.
மெய்யுணர்தல் மூலம் இருளையும், மருளையும் நீக்க வேண்டும் . அதுவே அறிவின் பயன் நாம் அனைத்தையும் அறிந்து கொண்டோம் என நினைக்கும் போதே நம்மால் நம் கண் காதையே அறிந்து கொள்ள இயலாது என்னும் உணர்வு தலைப்பட்டால் அதுவே நான் என்னும் அகந்தையே வேர் அறுக்கும். பேரின்பத்திற்கு வழிகாட்டும். -
சிவயநம
Simple and Powerful example strikes the reality within us.
ReplyDeleteEnlighten us with many such messages Amma.