அருளே குரு
தன்னலம் கருதாத குருநாதரும், தற்பெருமை பாராட்டாத சீடர்களும் நிறைந்த புண்ணிய தேசம் நமது பாரததேசம். பொதுவாக ஒரு மனிதன் வாயைத் திறந்தால் ஒன்று தனது பெருமையையும், தனது புகழையும் பாராட்டுவான் அல்லது பிறரைக் குறை கூறுவான். இதுதான் மனிதன் செய்துவரும் சாதனை.
நமது பாரத தேசத்தின் பழைய பெருமை குறைவுபடாமல் இப்படி ஒரு குருநாதரால்தான், இப்படி ஒரு சீடரை உருவாக்கமுடியும் என்று உருவாகியுள்ள சரித்திரம் ஒரு யோகியின் சுயசரிதை. அது ஒரு யோகியான யோகானந்தரின் சுயசரிதை அல்ல. அவரது குருநாதர் அவரை வழிநடத்திய சரிதை. அவரது குருநாதர் அவர்மீது பொழிந்த கருணை ஊற்றின் சரிதம்.
நமது பாரத தேசத்தின் பழைய பெருமை குறைவுபடாமல் இப்படி ஒரு குருநாதரால்தான், இப்படி ஒரு சீடரை உருவாக்கமுடியும் என்று உருவாகியுள்ள சரித்திரம் ஒரு யோகியின் சுயசரிதை. அது ஒரு யோகியான யோகானந்தரின் சுயசரிதை அல்ல. அவரது குருநாதர் அவரை வழிநடத்திய சரிதை. அவரது குருநாதர் அவர்மீது பொழிந்த கருணை ஊற்றின் சரிதம்.
எத்தனை விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றாலும் , உலகமே கணினி மயமானாலும் ஒரு குருவால் மட்டுமே மனிதனை மனிதனாகச் செய்யமுடியும் என்பதை விளக்கும் சுயசரிதை அது. ஒவ்வொரு மனிதனும் பரபரப்பு இல்லாமல் வாழ்வதற்கு ஒரு குருவும், அவர் பயிற்றுவிக்கும் பயிற்சியும் எவ்வளவு அவசியமானது என்பதை விளக்கும் சரிதம்.
ஒவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு, ஒரு குருவும் அவர் பயிற்றுவிக்கும் யோகப் பயிற்சியும் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் நூல் அது. மனிதன் ஒழுக்க நெறியுடனும், பண்பாட்டுடனும் வாழ்ந்தால் , ‘ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கு எழு கோடியும் விளங்க குலவு மெய்ப்பொருளே’ என்றும் ‘கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் ஆட்டுற விளங்கும் அரும்பெரும் பொருளே’ என்று அனைத்துச் சித்திநிலைகளையும் அனுபவத்தில் கண்டு உணரலாம் என்னும் அரிய தத்துவத்தை விளக்கும் சரிதம் அது.
ஒவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு, ஒரு குருவும் அவர் பயிற்றுவிக்கும் யோகப் பயிற்சியும் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் நூல் அது. மனிதன் ஒழுக்க நெறியுடனும், பண்பாட்டுடனும் வாழ்ந்தால் , ‘ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கு எழு கோடியும் விளங்க குலவு மெய்ப்பொருளே’ என்றும் ‘கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் ஆட்டுற விளங்கும் அரும்பெரும் பொருளே’ என்று அனைத்துச் சித்திநிலைகளையும் அனுபவத்தில் கண்டு உணரலாம் என்னும் அரிய தத்துவத்தை விளக்கும் சரிதம் அது.