23 November 2017

Asuras - அசுரர்கள்

அசுரர்கள்

                அசுரர்கள் என்றால் தலையில் 2 கொம்புகள்; வாயில் 4 கோரைப் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் என்று நமக்கு நாமே ஒரு கற்பனை செய்து கொள்கின்றோம்ஆனால் அசுரர்கள் அத்தகையவர்கள் அல்லர். யார் மாற்றான் மனைவியை விரும்புகிறார்களோ, யார் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படுகிறார்களோ, யார் அடுத்தவர் வயல் வரப்பையும் வெட்டித் தனதாக ஆக்கிக் கொள்கிறார்களோ, யார் உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுகிறார்களோ அவர்கள் அனைவருமே அசுரர்கள்தாம். இவா்களை மரம்போல்வர் மக்கள் பண்பில்லாதவர்’  என்பார் வள்ளுவா்.


மக்கள் பண்பு,  சகிப்புத்தன்மை, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் இவை எல்லாம் மனிதப் பண்புகள்.


                இதிகாச, புராண காலத்தில் வாழ்ந்த அசுரர்கள் நிறைய தவம் செய்தார்கள்அவர்கள் செய்த தவத்தின் பயனாக அரிய பல வரங்களைப் பெற்றார்கள்பெரிய பதவிகள், பட்டம் இவை தானாகவே வந்து சேர்ந்ததுஅவர்கள் தவம் அதிகமாக அதிகமாகக் கிடைத்த பதவியும், பதவியினால் வந்த மோகமும், ஆணவமும் தவத்தின் வலிமையை இழக்க வைத்ததுஆணவத்தின் காரணமாகத் தாங்கள் பெற்ற தவ வாழ்க்கையையும்; அதன் பயனாக சூரிய சந்திரர்களையும் ஆட்சி செய்தார்கள்


                கிரகங்களை இயற்கைக்கு முரணாக இயங்க வைத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் நினைத்தால் மட்டுமே காற்று வீசும். சூரியன் பிரகாசிப்பான்; சந்திரன் ஒளிவிடுவான்;   சப்த மேகங்களும் மழை பொழியும்தவம் செய்து பெற்ற அரிய வரங்களை, பதவி கிடைத்த ஆணவத்தால் நிலை தடுமாறி அசுரர்கள் இப்படி இயற்கைக்கு முரணாக இயற்கையை இயங்க வைத்தனா்.


இன்றைய சமுதாயநிலை



                ஆனால் எந்தத் தவமும் செய்யாமல் இன்றைய சமுதாய மக்களைக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் கவர்ந்து பதவிக்கு வரும் அரசியல் தலைவர்கள் பதவி மோகம் தரும் ஆணவத்தால், அவர்கள் நினைத்தால் தான் காற்று விசிறும் காற்றாடி சுழலும்கனரக வாகனங்கள் ஓடும்கனிமங்கள் பழுக்கும்காடுகள் இருக்கும்;   அணைகள் திறக்கும்இருளில் மூழ்கும் கிராமங்கள் வெளிச்சமாகும்படிக்கும் நேரத்தில் வெளிச்சம் வரும்தவம் செய்யாமல் பதவி மோகம் செய்யும் அரசியல் இது


                அந்த நாளில் சூரபன்மன் என்னும் ஒரு அசுரன் இருந்தான்முருகக்கடவுள் வந்தார்இராவணேஸ்வரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான் ஸ்ரீராமர் வந்தார்துரியோதனன் என்னும் பேராசைக்காரன் இருந்தான்சகுனி என்னும் குள்ளநரித் தந்திரம் செய்பவன் இருந்தான்ஸ்ரீகிருஷ்ணர் வந்தார்இப்படியாக பிறன் மனை நயத்தல், பிறர் பொருள் அபகரித்தல், வஞ்சனையால் பிறநாடுகளைக் கவர்தல் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒவ்வொரு அசுரர்கள் வந்தார்கள்அவர்களிடமிருந்து மக்களை விடுவிப்பதற்கு பரம்பொருள் திரு அவதாரம் செய்தது.


                தற்போது திரும்பிய இடமெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, தாய் மகனைக் கொல்லுதல், மகன் தாயைக் கொல்லுதல், தகாத உறவுகள் என்று சமுதாயம் மிகவும் சீரழிந்துவிட்டதுஎப்போது எல்லாம் தர்மம் நலிந்து அதர்மம் மேலோங்குகின்றதோ அப்போது நான் வருவேன் என்றார் கிருஷ்ணர்ஆனால் தற்போது மலிந்துவிட்ட அதர்மத்திற்கு பரம்பொருள் தனியாக வந்து எதுவும் செய்யவேண்டாம் என்று நினைத்துவிட்டது போலும்அதனால் இயற்கை அன்னையே காற்றாக, புயலாக, மழையாக, எரிமலையாக, பூகம்பமாக, ஆழிப் பேரலையாக அவதாரம் எடுக்க ஆரம்பித்துவிட்டாள்அது மட்டுமல்ல,

   “யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
 அதனின்  அதனின் பல”                 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           (
குறள்)


                மக்கள் எந்தச் சாதியின் பெயரால் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்களோ, அந்தச் சாதியே அவர்களை அழிக்கும் கருவியாகிவிடுகின்றதுசமயத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், வல்லரசுகளின் பெயரால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்ந்து விடுகிறார்கள்இதற்கெல்லாம் மாற்று வழி என்னவள்ளல்பெருமானார் நமக்கு உணர்த்துகின்றார். அன்பின் வழியது உயர்நிலை. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் நினைத்து ஒத்து உரிமையுடையவராய் நடக்கவேண்டும் என்று விரும்புகின்றார்அந்த விருப்பம் பாடலாகின்றது


அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
                ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்ஙனும் நான் சென்றே
                எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவமார்க்கம்
                திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும்
                தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே
                                                                                                                                (அருட்பா)


                மனித மனம் வளம் பெறவேண்டி வள்ளல்பெருமான் இறைவனிடம் வேண்டுகிறார். புறத்தூய்மை நீரால் அமையும். அகத்தூய்மை அன்பால் அமையும். அன்பு ஒன்றினால் மட்டுமே அமையும்வரப்பு உயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயரும் என்பார்கள்இவைகள் எல்லாம் சீராக நடக்க வேண்டுமானால் இயற்கை அன்னையின் ஒத்துழைப்பு வேண்டும்


                ஒழுக்கமான சமுதாயத்தில் மட்டுமே இயற்கை அன்னை தனது செங்கோலாட்சியை நடத்துவாள்ஒழுக்கமான சமுதாயம் உருவாக தனி மனிதன் ஒவ்வொருவனிடமும் மனிதப் பண்பும், மனிதநேயமும் வளரவேண்டும்மனித மனம் வளம்பட்டால்தான் மனிதநேயம் மலரும். மனிதநேயம் மலரவேண்டுமானால் ஜாதியிலே, மதங்களிலே அபிமானித்து அலையக்கூடாதுஆருயிர்கட்கு எல்லாம் அன்பு செய்யும் பெருநெறி பிடித்து ஒழுகவேண்டும்.



                வள்ளல் வழி நின்று நாமும் மனித மனவள மேம்பாடு துறை அமைத்து ஆருயிர்கட்கு எல்லாம் அன்பு செய்ய முயற்சிப்போம். வள்ளல் பெருமான் மலரடியை வணங்குவோம்! வணங்கி வளருவோம்!

14 November 2017

Do we enjoy all our possession - Second part வகுத்தான் வகுத்த வகை அல்லால் - இரண்டாம் பகுதி

வகுத்தான் வகுத்த வகை அல்லால் - இரண்டாம் பகுதி


1.     பொருத்தங்களில் எல்லாம் பெரிய பொருத்தம் மனப் பொருத்தம் என்கிறார்கள். தங்களது திருமணத்தைத் தாங்களே நிர்ணயம் செய்து கொள்ள இயலும் என்கிறார்கள்.10 ஆண்டு காதலிக்கின்றார்கள்  இரண்டு வருடத்தில் முறிவு செய்து விட்டார்களே! அன்பு செய்தது மனத்தையா? உடலையா? அன்பின் ஆழமும், அழுத்தமும் எந்த அளவு ஊனில் ஊடுவியிருந்தது, மனதில் ஊடுருவியிருந்தது. தொகுத்தார்க்கும் துய்த்தல்அரிது.

லட்சக்கணக்கான
நகையும் ,தொகையும் துய்ப்பதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும் தொகுத்து வைத்து வர வேண்டும. பணம் படைத்தவன் மனநிறைவோடு வாழ்கிறானா? என்பதனைஅவன் தொகுத்து வந்த ஊழ் மட்டுமே நிர்ணயிக்க முடியும்
   நாம் இந்த நிலம் வாங்கினோம். இதிலிருந்து பல ஆண்டு காலம்வாழ்வோம் என்று ,மனம் கற்பனை செய்யும் .வீடு கட்டி பால் காய்ச்சும் அன்று மின்சாரம் தாக்கி குடும்பமே பலி என்று பார்க்கிறோம்.நாம் தொகுத்து வந்த விதிக்குத் தகுந்தவாறு இறைவன் நமது வாழ்வை அமைத்துக் கொடுக்கின்றான்.அவன் வகுத்த வழியில் நாம் நம் விதியின் வண்ணம் அனுபவிக்க முடியுமே தவிர நாமாக முயன்று எதனையும் செய்ய இயலாது.

"
தீதும் நன்றும்பிறர் தர வாரா"-சங்கப்பாடல்

"for every action there is an equal & opposite reaction" .


மிக
எளிதாக வள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்றார்.

"ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியு மல்ல பிற"-குறள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இக்குறளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA அமைச்சராகத் தேர்வு செய்யப்படுகிறார்.நட்பு சுற்றத்திடம் தனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதற்கு வரும் வழியில் விபத்தில் உயிர் துறக்கின்றார்.கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தான்ஒரு பதவியைப் பிடித்து விட்டோம் என்று அவரதுகற்பனை சிறகடித்துப் பறந்த ,நீள, அகலம் என்ன ? அவருக்கு ஏற்பட்ட முடிவு என்ன ? இறைவன் ஒருவனுக்கு மட்டுமே முற்றுணர்தல் என்னும் பண்பு உண்டு .செத்துப் பிறக்கும் மனிதனுக்கு , அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கூற முடியாது .ஆனால் தம் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய போகங்களைப் பற்றி எண்ணற்ற கற்பனைகளைக் கொண்டிருப்பர். அடுத்த கணப் பொழுது நாம் வாழ வேண்டும் என்பது இறைவிதித்திருந்தால் மட்டுமே அதனைத் துய்த்து அனுபவிப்பது நமக்கு சாத்தியமானதாக இருக்கும்



.