27 November 2019

Sitthar Ilakkiyam- An Introduction - சித்தர் இலக்கியம் – அறிமுகம்


சித்தர் இலக்கியம் – அறிமுகம்


எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் கருணையினால், சித்தர் இலக்கியம்  என்னும் தலைப்பில்  சித்தர் பாடல்கள் பற்றிக் காண உள்ளோம்.
வழக்கமாக எல்லாரும் 18 சித்தர்கள் எனக் குறிப்பிடுவார்கள். கோடானு கோடி சித்தர்கள் நம் நாட்டில் மட்டும் அல்லாது ,   உலகம் முழுவதும் தோன்றியிருக்கிறார்கள்.  அவரவர்கள் , அவரவர்களுடைய சார்ந்த இடத்திற்குத் தகுந்த பண்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.  

காகபுஜண்டர் வரலாற்றில் அவர் பல சீடர்களை உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி, அங்கு ஒரு சமயத்தை உற்பத்தி செய்து, ஆங்காங்கு உள்ள மக்களுக்கு நல்வழி காட்டி வர அனுப்பியுள்ளதை, நாம் காண முடிகிறது. . உதாரணமாக  சீனா , ரஷ்யா மற்றும் அரபு நாடுகளில் அவர் சீடர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுச் செய்திக் குறிப்புகள் உள்ளன.

உலகியலில் ,நாம் நம்மை  அறிமுகப்படுத்துப் பொழுது,   நமது ஊரைக் குறிப்பிட்டு, அந்த  ஊரில் உள்ள பிரபலமாக இருப்பவர்கள்களுக்கு நாம் உறவினர் எனக் குறிப்பிடுகிறோம்.
அதே போல்,  மக்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது,  நான் சித்தர் பரம்பரையில் வந்தவன் எனக் குறிப்பிடுவதை ஒரு பெருமையாக நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் முன்னேற்றமான , முற்போக்கு சிந்தனை உடையவர்கள் சித்தர்கள்.
18 சித்தர்களுக்கெல்லாம் அப்பாற் பட்ட சித்தனாக,, சித்தர் தலைவன் என்று முருகப் பெருமான் மற்றும் சிவ பெருமானைக் கூறுவார்கள். சித்தர் தலைவன், பேரண்ட நாயகன் ஒருவனே.

 யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாம் ஒரே ஊரே, யாவரும் சொந்தக்காரர்கள், ஜாதி, இனம் ,மதம், செல்வந்தர், ஏழை என்னும் பிரிவினைகளுக்கு அப்பாற் பட்டவர்கள் சித்தர் பெருமக்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா:

நாம் அனைவரும் வாழ்வில் வரும் துயரங்களைக் குறித்து, “ என் அப்பா அம்மா செய்த பாவம் எனக்கு வந்துள்ளது, எம் தாத்தா,  பாட்டி செய்த பாவம் தான் காரணம்”  என விசனப்படுகிறோம். “நான் தவறு செய்தேன்” என யாரும் ஒப்புக் கொள்வதில்லை.


அனைத்து குடும்பத்துக்கும் , “எமது முன்னோர்களில் யாரோ ஒருவர் ஒரு குழந்தையைக் கொன்று விட்டனர், ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள், ஒரு பசுவைக் கொன்றனர், கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தீங்கு இழைத்தனர்” என ஏதோ ஒரு பின்புலக்கதை இருக்கும். 
ஆனால் சித்தர்கள் , “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் மேம்பட்ட கொள்கையைக் கொண்டவர்கள்.  இதையே,


“பெருமைக்கும், ஏனை சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக்கல்”

என்கிறார் வள்ளுவர்.

 நான் ஏதோ ஓரு நல்வினை செய்யப்போய் , நமக்கு நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல சுற்றம், நல்ல நட்பு இவைகளெல்லாம்   கிடைத்திருக்க முடியும். அதற்கு நாம் ஏதோ ஒரு வகையில் செய்த புண்ணியமே காரணம். அதே போல்  நாம் அனுபவிக்கும் துயரங்களும், ஏதோ ஒரு பிறவியில் நாம் செய்த வினையின் ,எதிர்வினையே.

சித்தர் வரலாறுகள் “சித்தர்கள் மிகப் புரட்சிகரமான சிந்தனை உடையவர்கள். அவர்களுடைய சிந்தனைக்கு எந்த விஞ்ஞானியும், எந்த பெரிய பகுத்தறிவுவாதிகள் ஒத்துப்போக முடியாது அவ்வளவு புரட்சிகரமான சிந்தனை உடையவர்கள்” என்னும் கருத்தை உணர்த்துகிறன.

 உதாரணமாக

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணு முணு என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
-      சிவவாக்கியர்

இப் பாடலின் முதல் சில வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு. “ யாரும் கோயிலுக்குப் போகாதீர்கள், அங்கு தெய்வம் இல்லை”  சித்தர்கள் புற வழிபாட்டைக் கண்டித்துள்ளனர் என்னும் விதண்டாவாதம் பேசுவர் பலர். “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” என்னும் மிக முக்கியக் கருத்தை விட்டு விடுவர்.

திருக்கோயில்கள்   , அந்த காலத்தில் ஒரு கலையரங்கம்  போலத் திகழ்ந்தன.. கோயிலில் தான் திருமணங்கள் நடைபெற்றன. கலை , இலக்கியம் பண்பாடு இவைகளை நிறைவேற்றக் கூடிய இடமாக திருக்கோயில் திகழ்ந்துள்ளது.

திருக்கோயில்கள் , ம் உடம்புக்குள் உள்ள உண்டான தத்துவங்களைக் குறியீடாக உணர்த்தின.  அங்கு உள்ள பலிபீடம்,  நந்தி , கொடிமரம் அனைத்தும் ஒரு குழூ உக் குறியாக விளங்குகின்றன.

சுட்ட சட்டி , சமைத்த உணவின் சுவை அறியாது
குயவன் , மண் பாண்டம் செய்யும் பொழுது, குழைத்த மண்ணை சுடுவான். சுடாத மட்பாண்டம் உணவின் சுவையை தன்னுள் உறிஞ்சு கொள்ளும். ஒரு பயனில்லாமல் உடைந்தும் போகும். சுட்ட பாண்டம் , சமைத்த உணவின் சுவை அறியாது. 
ஆன்மா பக்குவப்படுத்தப்பட்ட பாத்திரமாக மாறி விட்டால், புறவழிபாடு நோக்கி போக வேண்டாம். அகவழிபாடு மூலமாகவே அவர்களுக்கு பலன் கிட்டும். நாம் ஐம்பொறிகளையும், புலன்களையும் சுட்டதாக (பக்குவப்படுத்தப்பட்டதாக) வைத்துக் கொள்ள வேண்டும் என்னும்  ஒரு மிகப் பெரிய தத்துவத்தை இப் பாடல் உணர்த்துகிறது,

சித்தர்கள் மெஞ்ஞானத்தின் எல்லையைக் கண்டவர்கள். அவர்கள் அறிவு , மிகவும் பண்பட்ட அறிவு.

"பாலாற்கழி இப்பல நாள் உணக்கினும் வாலி தாம்
பக்கம் இருந்தைக்கு இருந்தன்று"
-      நாலடியார்.
-       
பாலினால், கரியை எவ்வளவு நாள் கழுவி , உணர்த்தினாலும், கரிக்கு வெண்மையாகும் தன்மை கிட்டாது. அது போல், நோன்பு நோக்காத உடலினுள் அறிவு புகுந்தால், , அது தர்க்க வாதம், குதர்க்க வாதம் அனைத்தையும் பண்ணும், பொருள் ஈட்ட உதவும் , ஆனால் பிறவி நீக்கத்திற்கு ஒரு போதும் பயன்படாது.


நோன்பு நோற்ற உடம்புக்குள் உள்ள அறிவு , உண்மையை பிறருக்குப் பறைசாற்றும் , தானே வாழ்ந்து காட்டும் அதுதான் ஒரு ஞானஆசிரியனுக்கு அழகு. அப்படிப்பட்ட அறிவு உடையவர்கள் சித்தர்கள்.

சரியை, கிரியை ,யோகம், ஞானம் எனும் நால் வழிகளில், ஞானத்துள் ஞானத்தை வலியுறுத்துவன சித்தர் இலக்கியங்கள். சித்தர்கள் இறை அனுபவத்தைத் தனக்குள் உள் வாங்கிக் கொண்டவர்கள். சித்தர்கள் அண்டத்தில் உள்ள அத்தனை ரகசியங்களையும் மது பிண்டத்திற்குள் கண்டவர்கள் அது மட்டுமின்றி நாமும் காணும்படியாக அவர்கள் நமக்கு அறிவுரை சொல்லி உள்ளார்கள்.  அவர்கள் உணர்த்துவது , ஆன்மாக்களாகிய நாம், நமது உடலாகிய வீட்டைக் கொண்டே , வீடு , பேறு அடையலாம் என்பதே.

19 October 2019

போதமும் கடந்த போதம்



போதமும் கடந்த போதம்


அப்பைய தீட்சிதர் என்னும் மகான் இருந்தார். அவர் அல்லும் பகலும் சிவநாமத்தையே கூறிக்கொண்டிருந்தார். சிவநாமம் அவரது ஊனிலும் , உணர்விலும் கலந்து நிறைந்து நின்றது. மகான்கள் வாழ்ந்தபோது அவர்களை விமர்சனம் செய்யும் கூட்டமும் சேர்ந்தே வரும் என்பதனை ஒவ்வொரு அடியவர்கள் வாழக்கைச் சரித்திரமும் கூறுகின்றது. அப்பைய தீட்சிதர் ஒன்றும் சிவனடியார் அல்ல என்றும்; ஊரார் தம்மைச் சிவனடியார் என்று பெருமையாக நினைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அப்பைய தீட்சிதர் யாரைக் கண்டாலும் சிவாயநம என்று கூறுகின்றார் என ஒரு சிலர் கூறினர்


     தீட்சிதர் தனது சீடர்களிடம் ,ஊமத்தைச் சாற்றைக் குடித்துத் தற்போதம் இழந்தநிலையில் எனது மனமும்உணர்வும் சிவநாமம் சொல்கின்றதா? என்று அறிய ஆவலாக உள்ளதுநான் ஊமத்தைச் சாறு குடித்தபிறகு என்ன செய்கின்றேன் என்பதனை அறிவதற்கு எனக்குச் சுயநினைவு இருக்காதுஅதனால் நீங்கள் நான் செய்வதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்மீண்டும் சுயஉணர்வு வரும்போது என்னிடம் கூறுங்கள் என்றார். சீடர்கள் இது என்ன விஷப்பரீட்சை என்று பயந்தனர். ஆனாலும் குருநாதரின் ஆணைக்குப் பணிந்து அவ்வாறே செய்வதாகக் கூறினர்குருநாதரும் ஊமத்தைச் சாற்றைக் குடித்தார்


     போதமாய் ஆதி நடு அந்தமும் இல்லாத ஆனந்த நிலையில் நின்று நூறு பாடல்கள் பாடினார். சீடர்கள் அப்பைய தீட்சிதரின் பாடல்களைக் குறித்துக் கொண்டார்கள்.



தானஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே
 வான் ஆதிமாயை வழங்காதோ
                                      (தாயுமானவர்)



     என்று வான் ஆதி மாயை கடந்த நிலையில் அப்பைய தீட்சிதரின் பாடல்கள் விளங்கின. அப்பைய தீட்சிதரும் கலங்கிய மனநிலை தெளிந்தபிறகு அந்தப் பாடல்களைப் படித்தார். 

     என்னை உன்னை இன்னது என்னாமல் நிற்கும்நிலை. தன்னை ஈசன் தனக்கு அருளிய திறத்தை நினைத்துப் பார்த்து வியக்கின்றார்.

23 September 2019

The Doctor who cures any disease - தீரா நோய் தீர்க்க வல்லான்



உயிர் அதிசயம்


     ஒன்பது வாசல் அமைந்துள்ள இந்த உடலில் உயிர் தங்கியுள்ள தொழில் நுட்பமும் , ஒவ்வொரு இயங்கு தசைகளும் ,இயக்கு தசைகளும் செயல்படும் விதமும் சித்தம் அறியாதபடி சித்தத்துள் நின்றிலங்கும் திவ்ய தோஜோமய பரம்பொருளின் அருள்திறமும் எத்தனை எத்தனை யுகங்கள் ஆனாலும் புரியாத ஒரு புதிர்.

  
அந்த அதிசயத்திற்குள் ஓர் அதிசயமான மெய்யுணர்வு பெறுதல் என்பது இறைவனால் அருளக்கூடிய ஒரு அருட்பிரசாதம். இதையெல்லாம் முதலில் நம்மால் புரிந்துகொள்ள இயலாது. அதனால் இறையடியவர்களை இறைவன் அனுப்பி, அவர்கள் மூலமாக சில அற்புதங்களை நடத்துகின்றான்அதன் வழியாக நாம் அவனையும் அவனது அருள் உணர்வையும் புரிந்து கொள்ளவேண்டும் என இறைவன் விரும்புகின்றான்அதனால் திருஞானசம்பந்தரை இவ்வுலகிற்கு அனுப்பி அவரை மையமாகக்கொண்டு சில அற்புதத் திருவிளையாடல் செய்கின்றான்.

தீராத நோய் தீர்த்தல்



     திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் என்னும் சிவபக்தர் வசித்து வந்தார். அவரது மகளுக்கு முயலகன் என்னும் திருகுவாதநோய் வந்தது.  எத்தனையோ விதமான மருத்துவங்கள் செய்தும் குணம் தரவில்லை.  தான் சரண் அடைந்துள்ள மூலமுதல்வன் திருவடியினைத் துணையாகப் பற்றினார் கொல்லிமழவன். 
     மந்திரமும், தந்திரமும், மருந்துமான பரம்பொருளே தன்னையும்தன் மகளையும் உய்வடையச் செய்யும் பேராற்றல் என்பதனை உணர்ந்த கொல்லி மழவன் திருப்பாச்சிலாச்சிராமத்துத் திருக்கோவில் சென்று தன் மகளை சிவன் தாளில் ஒப்புக்கொடுத்தார்.


     திருஞானசம்பந்தர் தனது யாத்திரையில் ,திருப்பாச்சிலாச்சிராமம் வருகின்றார்சிவன் கோவில் வரும் வழியில் கொல்லிமழவன் ஞானசம்பந்தரை பூரணகும்பம் வைத்தும், வழிநெடுகிலும் மா, வாழை,கமுகு இவற்றால் அலங்காரம் செய்தும், பலவகையான சிறப்புகள் செய்தும் வரவேற்கின்றார். சிவன் கோவில் வந்த ஞானசம்பந்தர் கொல்லிமழவன் மகளைப் பார்க்கின்றார். அவருக்கு உற்றநோய் பற்றி ஞானசம்பந்தரிடம் விரிவாக எடுத்துரைத்தார் கொல்லி மழவன். தனது மகளின் நோய் தீர்க்கவேண்டி வைத்தியநாதனான சிவனைச் சரண் அடைந்துள்ளேன் என்றார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஞானசம்பந்தர் இறைவன் தாள் பணிந்து வேண்டினார்.

     சந்திரன் செய்த பாவத்தை எல்லாம் பொசுக்கி அவனைச் சடையில் சூட்டியுள்ளார். உலகத்து உயிர்கள் எல்லாம் உய்வடைய வேண்டும் என்று கண்டத்தில் நஞ்சைத் தேக்கிய சிவனுக்கு, இந்தப் பெண்ணின் வினைப்பயனைப் பொசுக்கி இந்த ஓர் உயிரை வாழவைக்க முடியாதா?  உலகுயிர்களை எல்லாம் உய்விக்க மணிவளர் கண்டராக விளங்கும் இறைவனுக்கு, ஒரு பெண்மணியின் உடல்பிணி தீர்க்கமுடியாதா? என்னும் பொருள்பட ஞானசம்பந்தர் பாடவும் இறையருள் கருணையால் கொல்லிமழவன் மகளின் நோய் தீர்ந்தது.  தந்தையும் மகளும் திருஞானசம்பந்தர் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.  எல்லாம் வல்ல மூல முதல்வன் செய்த கருணை என்பதனை மக்கள் புரிந்து கொள்ளும்படியாகப் பதிகங்கள் பாடினார்.


ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
 சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
 மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
 சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே
                                                                                                                          (
திருமுறை 3)


     நமக்கு வந்துள்ளது மாதுக்கம் (மிகப்பெரிய துக்கம்). அது நீங்கவேண்டுமானால் சுடர்விட்டுள்ள சோதியை மனம் பற்றி வாழுங்கள். முயலகன் நோய் உடலைப் பற்றியதாக இருந்தாலும், மனத்தைப் பற்றியதாக இருந்தாலும் அதிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.


     நமக்கு ஒரு சந்தேகம் வரும். நோய் தீர்க்கும் மருத்துவமனைகள் பெருகிவிட்ட இக்காலத்தில் நாம் இறைவனை நாடியே நோய் தீர்த்துக் கொள்ளலாமே. பிறகு எதற்கு மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் என்று சிந்திக்கத் தோன்றும். பாம்பு கடித்த ஒருவனுக்குத் தன்னைப் பாம்பின் விஷம் எதுவும் செய்யாது என்னும் உறுதிப்பாடு இருக்குமானால், பாம்பின் விஷம் அவனைப் பாதிக்காது.  அதுபோல் நோய்வாய்ப்பட்ட ஒருவன் தான் இறையருள் துணையால் பிழைத்து விடுவோம் என்னும் நம்பிக்கையும், துணிவும் இருக்குமானால் பவரோக வைத்தியநாதனே மருந்தாகவும், மருத்துவனாகவும் நின்று நோய் களைவான்.


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
 மீளாக் காதல் நோயாளன் போல் .....

                                      
                                                                    (
குலசேகர ஆழ்வார்)

     என்று ஆழ்வார் பாடுவதுபோல் வாளால் அறுத்தாலும் ,சுட்டாலும் ,மருத்துவன் பால் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் இறைவன் பால் செலுத்தினால் உறுதியாக இறைவன் பிறவி நோயையே வேரறுப்பான்.