24 October 2017

Do we enjoy all our possession? வகுத்தான் வகுத்த வகையல்லால் ....


வகுத்தான் வகுத்த வகையல்லால் ...

1.   "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" - குறள்


பல கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தாலும் அனுபவிக்க வேண்டும் என்னும் விதி இருந்தால் மட்டுமே அனுபவிக்க இயலும். நம் நாட்டில் நமது கிராமத்தில் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் விளையும் காய்,கீரை,கிழங்கு ,பழவகைகள் அனைத்தும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் விளங்குகின்றது. இயற்கைக்கு மாறான உணவு வகைகளை தேர்ந்தெடுக்கும் போது , அவைகளே நமது உடலிற்கும், மனதிற்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தி மனஉளைச்சலையும்,உடல் நோவையும் தருகிறது.
2.    பேராசை வயப்பட்டு,கோடி, கோடிக்கு மேல்கோடி என்று சேர்க்கும் பணத்தை, அனுபவிக்கும் பேறு உள்ளவர்கள் மட்டுமே அதை அனுபவிக்க இயலும். அல்லது அவர்கள் விரும்பி உண்ணும் இட்லி,சாம்பார், இடியாப்பம்,குருமா இவைகளுக்குப் பதிலாக கூழ் சாப்பிடும் சூழல் உருவாகும். துய்த்தல் என்னும் பதத்தை, அனுபவித்தல் என்னும் பொருளில் வள்ளுவர் பயன்படுத்துகின்றார்.

3.    கோடிபணம் தொகுத்தவர்கள் ஒரே நேரத்தில் நான்கு கட்டிலில் படுத்துக்கொள்ள முடியாது .சுவையான உணவு என்பதால் இரு வேளைக்குச் சேர்த்து , ஒரு வேளைக்கே எடுத்துக்கொள்ள முடியாது .தொகுத்து வைத்த பொருள் ,நம் குழந்தைகளுக்கு ஆகும் என்றால் நம் கண் முன்னாலேயே அக்குழந்தைகள் மரண வேதனைக்குச் சமமான நோயை அனுபவித்து வருகிறார்கள். குடும்பமே ஒற்றுமையின்றி அவதிப்படுகின்றது.கோடி தொகுத்தாலும் துய்த்தல் அரிது என்பது பொன் எழுத்தில் பொறிக்கப்படும் வார்த்தைகள்.

4.     வைரம், வைடூரியம் என பல கோடியில் நகை வாங்கி வைத்துள்ளோம். அவைகளைப் போட்டு அழகுபார்பதற்குக் கணவன், மனைவியரிடை ஒற்றுமை இல்லை. வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை. வெளியில் அணிந்து சென்றாலும் பாதுகாப்பில்லை. கோடி தொகுத்து என்ன பயன்?
மிகச் சாதாரண குடும்பத்து மக்களும் 40 பவுன் நகை சேர்த்து விடுகிறார்கள் .தங்கத்தில் உள்ள உலோகச்சத்து, சில மனநோய்களுக்கும், சில உடல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.அதனைப் பயன்படுத்துவது திருமணம் மற்றும் வீட்டில் உள்ள விசேச நாட்களில், ஒருவருக்கொருவர் மனம் ஒன்றி வாழ்வதற்காகவே. ஆனால் இன்று அனைத்து நகைகளையும் துய்க்கும் பேறு பேங்க் லாக்கருக்கே உள்ளது.ஜடமான வங்கிப்பாதுகாப்புப் பெட்டகம், வைர வைடூரியங்களைச் சுமந்து நிற்கிறது .

கோடி தொகுத்தவர்களின் நிலை? 



நகை வாங்கும் வசதி இல்லாதவர்கள் கூட அக்காலத்தில் திருமணம் ,சீமந்தம்,பூப்பெய்தல் போன்ற காலங்களில் உறவினர்களிடம் நகை வாங்கி அணிந்து கொள்வார்கள் .தங்கத்தின் மருத்துவ குணம்,மன நலம் பேணல் மற்றும் மங்கலச் சின்னம் என்று அதற்கான மதிப்பீடு மக்கள் மத்தியில் பரவலாகத் தெரிந்திருந்தது.தற்போது மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.ஆனால் தங்கம் எதற்கு அணிகிறோம் என்பது புரியவில்லை . வாங்கி வந்த நகைகள் தங்களது உறவினர்களிடம் பெருமையாகப் பேசுவதற்கும்,ஆர்ப்பாட்டமாகக் காட்டுவதற்கும் பயன்படுகிறது. திருமணத்திற்காகப் பல லட்சங்கள் செலவு செய்து நகை வாங்குகின்றார்கள். அந்த நகையினை அணிந்து கொண்டு மங்கலமாக அனுபவிப்பதற்கு மணப்பெண்ணிற்குக் கொடுத்து வைக்கவில்லை. வாங்கிய பட்டுப் புடவைக்குப் பொருத்தமாகப் பித்தளை, இரும்பு, வெள்ளி இவைகளில் பொருத்தப்பட்ட கல்நகைகளை அணிந்து கொள்கிறார்கள். கோடி தொகுத்தும் அனுபவிக்க இயலவில்லை ?

 –தொடரும்.

12 October 2017

Wife as a Guru and her words of wisdom - என்னையும் ஓர் வார்த்தையுள் படுத்தாய்

என்னையும் ஓர் வார்த்தையுள்  படுத்தாய்


   வாசுதேவன் என்னும் சிவபக்தர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார்சிறு வயது முதல் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் சிவபூசை செய்வதிலும், திருவாசக, தேவார பதிகங்களில் தோய்ந்தும் வாழ்ந்து வந்தார். தினசரி பிரதோச காலத்திலும், மாதம் இருமுறை வரும் பிரதோச காலங்களிலும் சிவபூசை செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் பிரதோசத்தன்றும், தேய்பிறையில் வரும் பிரதோசத்தன்றும் சிவ நாமம் மட்டுமே உணவாக ஏற்றுக்கொண்டு சிவப்பணி செய்வார். மறுநாள் சதுர்த்தசியன்று அதிகாலையில் சிவன்கோவில் சென்று வழிபாடு முடித்தபிறகு உணவு உட்கொள்வார். இவருடைய இறை பக்தியைக் கண்ட உறவினர்கள் வாசுதேவனுடைய பக்திக்கு ஏதுவாகவும், உறுதுணையாகவும் இருக்கக்கூடிய வகையில் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து வைத்தனர்வாசுதேவனும் இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு முன்னோர் காட்டிய நெறியில் பக்திப் பயிர் வளர்த்தார்.


                ஒருநாள் பிரதோசத்தன்று விரதமாக உபவாசம் இருந்தார். முதல்நாள் முழுவதும் உண்ணா நோன்பு மேற்கொண்டு, இரவு முழுவதும் சிவபெருமானின் மீது பக்தி  பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை தனது வழக்கமான பூசைகளை முடித்துக்கொண்டு திருக்கோவில் வழிபாட்டிற்குப் புறப்பட்டார். மனைவி, தன் கணவன் வருவதற்குள் சமையலை முடிக்கவேண்டும் என அனைத்து வேலைகளையும் வேகமாகச் செய்தார்சமையலையும் முடித்துவிட்டுச் சற்று ஓய்வாகத் திண்ணைக்கு வந்தார்


                கருவுற்றிருந்ததால் மயக்கமும், தலைசுற்றலும் அதிகமாகவே வந்ததுஅதனால் ஓய்வாகப் படுத்திருந்தார்பெரியவர்கள் துணை இல்லாததால், கர்ப்பம் பற்றி அறிந்து கொள்ளவில்லை தம்பதியர்கோவில் செல்வதற்காகச் சென்ற வாசுதேவன் வழியில் கீரை விற்பதைப் பார்த்தார்கீரையை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு வந்தால் திருக்கோவில் சென்று வருவதற்குள் சமையல் செய்து வைத்துவிடுவாள் மனைவி என்னும் நினைவு வந்தது. கீரை வாசுதேவனுக்கு மிகவும் பிடித்த உணவு. கீரையை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்


                மனைவி தாழ்வாரத் திண்ணையில் படுத்திருந்தார். மனைவி கர்ப்பமாக இருப்பதோ, அதனால் சோர்வாகப் படுத்திருப்பதோ வாசுதேவனுக்குத் தெரியாது. மனைவியிடம் கீரையைக் கொடுத்துவிட்டு, தான் கோவிலுக்குச் சென்று வருவதற்குள் சமைத்து வைத்துவிடு என்று கூறினார்சமையல் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாகவும், அதனால் மறுநாள் சமைப்பதாகவும் மனைவி கூறினாள். இன்று சதுர்த்தசி விரதத்தைக் கீரை சேர்த்து நிறைவு செய்யவேண்டும்சமையல் வேலை முடிந்தாலும் கோவில் சென்று வருவதற்குள் மீண்டும் சமைத்து வைத்துவிடு என்றார்.


                மிகுந்த சோர்வு காரணமாகவும், மீண்டும் மீண்டும் அவர் சமையல் செய்யச் சொல்லவும் மனைவி மிகவும் சலிப்புற்று ஒரு கீரையின் மீதுள்ள பற்றைக் குறைப்பதற்கு வழியில்லைமனம் மீண்டும் மீண்டும் கீரையைத்தான் பற்றுகிறதே தவிர, சிவத்தைப் பற்றியதாகத் தெரியவில்லை என்று கூறிவிட்டார்


                கீரையை வைத்துவிட்டு வாசுதேவன் கோவில் சென்றார். போகும் வழியெல்லாம் ஒரு கீரையைத் துறப்பதற்கு மனம் இல்லை எப்படிச் சிவனைப் பற்றுவது. மனைவியின் கூற்று காதில் விழுந்துகொண்டே இருந்ததுஎத்தனை ஆண்டுகாலம் பிரதோச விரதம் இருக்கின்றோம்? ஓயாமல் நதிகள் எல்லாம் மூழ்கினும் என்ன பயன்நித்தமும் விரதங்கள் இருந்து என்ன பயன்மனம் அடங்கும் திறத்தினில் ஓரிடத்தில் இருக்கும் வகை தெரியாமல், நாம் என்ன பக்தி செய்தோம்


                முதல் நாள் முழுவதும் உண்ணா நோன்பும், உறங்கா நோன்பும் நோற்றதன் பயன் ஒரு கீரையின் மீதுள்ள ஆசையைக்கூடத் துறப்பதற்கு வழி செய்ய வில்லையே. மனைவி இன்றைய சமையல் வேலை முடிந்துவிட்டது நாளைய சமையலில் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறிய போதுகூட மீண்டும் மீண்டும் அவளது சோர்வு பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல், நாம் கூறியதையே கூறினோமேஅதனால்தானே இதுவரை எதிர்த்து வாய் பேசாது இருந்தவள் ஒரு கீரையைத் துறப்பதற்குக்கூட துணிவில்லாத பக்தியும் பிரதோச வழிபாடும் வாழ்வியலுக்கு என்ன பயன் தந்துவிடும் என்று கேட்டாள்; என இதையே பலவாறாகச் சிந்தித்தார்அவரது மனம் நிலைபெறவில்லை



                துறவு என்பது எவ்வளவு மேலானது. பக்தி என்பது எத்துனை புனிதம் நிறைந்ததுகீரை உணவின் மீதுள்ள மோகம் பக்தியை குறைக்கும்படி ஆயிற்றேமனைவி சொன்ன சொல் வாசுதேவன் மனத்தை அறுத்தது. மனைவி சொன்ன ஒரு மொழியே குரு மொழியாயிற்று. கீரையை மட்டும் என்ன வாழ்க்கையையே துறந்துவிட்டார். தஞ்சையை அடுத்த ஒரு குக்கிராமத்தில் சென்று யாருக்கும் தெரியாமல் தனது துறவு வாழ்க்கையைத் துவங்கிவிட்டார் வாசுதேவன்அத்வைத நிலையில் சித்திபெற்ற அவர் வாசுதேவப்ரம்மம் என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றார்வாசுதேவ ப்ரம்மத்திற்கு தன் மனைவியே குருவாகவும், தன் மனைவி சொன்ன ஒரு சொல்லே குரு மொழியாகவும் ஆயிற்று

6 October 2017

Guru's Kindness - கருணை எனும் குரு

கருணை எனும் குரு



பரமஹம்ச யோகானந்தர் தான் ஆத்மசாதனையில் முன்னேற வேண்டும் என விரும்பினார். அவருடைய நண்பர், ராம்கோபால் என்னும் ஒரு தூக்கமற்ற மகானைச் சந்தித்தது பற்றியும், அவர் ஆன்மீக ஆற்றலின் மொத்த வடிவம் என்பது பற்றியும் அடிக்கடி பரமஹம்சரிடம் கூறுவார். யோக நிலையில் முழு அனுபவம் பெற்ற மகாயோகி அவர் என்றெல்லாம் குருவின் பெருமையினைப் பேசிக்கொண்டே இருந்தார். அவரிடம் பேசப்பேச அந்த மகா யோகியைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார் பரமஹம்சர்.


                ஒருநாள் அவர் எங்கு இருக்கிறார் என்பதனை உத்தேசமாகத் தெரிந்துகொண்டு, அவரைப் பார்க்கச் சென்றார் யோகானந்தர்வழியில் தாரகேஸ்வரம் என்னும் ஊர் வழியாக வருகிறார். அங்குள்ள புகழ்பெற்ற திருக்கோயில் வந்து சேர்ந்தார். இந்தக் கற்சிலையினால் நமக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகின்றது என்று நினைத்தார்.


                பின்னர் தான் தேடிவந்த குருவைப் பார்ப்பதற்குச் செல்கிறார். தெருவில் போவோர், வருவோர் அனைவரிடமும் வழிகேட்டுவிட்டுப் பின் தாம் போகவேண்டிய திசையிலிருந்து நேர் எதிர்த்திசையில் 10 மணிநேரம் நடந்து வந்துவிட்டார். அதன் பிறகு பாதை தெளிவாகத் தெரிந்த ஒரு குடியானவனிடம் மகானைப் பற்றி விசாரிக்கின்றார். குடியானவன் அன்புடன் வீட்டிற்கு அழைத்ததும் செல்கின்றார். அவர் வீட்டில் தங்கி, இரவு உணவு முடித்துக்கொள்கின்றார். பின் அங்கிருந்து அதிகாலையில் ராம்கோபால் மஜும்தாரைச் சந்திக்கச் செல்கின்றார்பத்து மணிநேரம் நடந்து வந்த பாதையில் மீண்டும் திரும்பிச் செல்லப் பணிக்கின்றான் குடியானவன்


                காலையிலிருந்து நண்பகல் 12 மணிவரை நடக்கின்றார் பரமஹம்சர்எதிர்பாராத விதமாகத் தான் தேடி வந்த குருவே இவர் எதிரில் தோன்றுகின்றார்மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும். ‘சின்ன ஐயாநமது மலம் சோறும் ஒன்பது வாயில் கொண்ட இந்த உடம்பிற்குள் சிவன் உரையும்போது தாரகேஸ்வரம் திருக்கோவிலில் சிவன் இருக்கமாட்டாரா? என்று வினவுகின்றார்இதைக் கேட்டதும் மிக்க அதிர்ச்சி அடைகின்றார் யோகானந்தர். எப்படி இவருக்கு இவை எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றார்பின் அவரே யோகானந்தரைத் தனது யோக சாலைக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவு தயாரித்துக் கொடுக்கின்றார். பின் இருவரும் தியானம் செய்கிறார்கள்.


                உறக்கமற்ற அந்த மகான், தான் 48 ஆண்டுகளாக ஒரு நாளைக்குப் 18 மணிநேரம் வரை பயிற்சி செய்ததாகவும் அதன்பிறகு செம்மையே ஆய சிவபதம் பெற்றதாகவும் கூறுகிறார். யோகானந்தர் தனக்கும் அவ்விதமான யோக நிலைகளைக் கற்றுத் தருமாறு வேண்டுகின்றார்ஒரு குருநாதர் எல்லா உயிருக்கும் குருநாதராக அமையமுடியாது எனறும்; ஸ்ரீ யுக்தேஸ்வரர் மூலம்தான் நீ முழுநிலை பெறுவாய் என்றும்; அவர் மூலமாக இந்தக் யோகக்கலை உலகம் முழுவதும் பரவும் என்றும் அறிவுறுத்துகிறார்.


பால் நினைந்தூட்டும் தாய்



                நான் எனது என்பதைக் கடந்த மகான்கள், தான்தான் பெரியவர் என்றோ, தன்னால்தான் இதைச் சாதிக்கமுடியும் என்றோ ஒரு போதும் எண்ணுவதில்லைமேலும் ஒரு உயிர் யார் மூலம் எப்போது எங்கேதன்னை உணர்தல்என்னும் பேரானந்த நிலை பெறமுடியும் என்பது எல்லாம் எத்தனை கணினிகள் வளர்ச்சி அடைந்தாலும் கண்டுகொள்ள முடியாது. அவற்றை எல்லாம் அந்தப் பேரண்ட உணர்வில் கலந்த ஞானிகளால் மட்டுமே அறுதியிட்டுக் கூறமுடியும்பேரானந்த நிலையில் நிரந்தரமாக நிலைத்திருக்கும் பூரண ஞானிகள் தன்னால் மட்டுமே இதையெல்லாம் சாதிக்கமுடியும். வேறு யாராலும் இவற்றைச் செய்யமுடியாது என்று எண்ணுவதில்லை. குருவிற்கும், சீடனுக்கும் உள்ள உறவு மிகவும் புனிதமானது. இந்த உலகில் நாம் உறவுமுறை சொல்லிக் கொண்டாடிவரும் அனைத்து உறவுகளையும் விட அது மேன்மையானது


                யோகானந்தர் மீண்டும் குருநாதர் ஸ்ரீஸ்ரீ யுக்தேஸ்வரரை வந்து சேருகின்றார். என்னை விட்டுவிட்டு வேறு ஒரு குருவை நாடி ஏன் சென்றாய் என்றோ, எங்கு சென்றாலும்; நீ என்னிடம் தானே திரும்பி வந்தாய் என்றோ அவர்  கேட்கவில்லை. மாறாக பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து தனது சீடருக்கு யோக நிலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.



கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடாக் காட்சி உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே


எனத் தாயுமானவா் கூறும் கருணை ஆறு குருநாதா் என்பதனை அனுபவத்தில் உணா்ந்தார் பரமஹம்சா்