25 June 2017

Thiruvasagam Sivapuranam 1to5 - சிவ புராணம்

Thiruvasagam - Sivapuranam 

The moment Manivasagar Perunthagai realized the Divine experience, the cycle of birth and death determined by the Karma of the soul, which had been carried over for generations, failed its purpose as the Omnipotent has showered his blessings by enlightening Perunthagai and thereby, ensuring his Devotee Perunthagai will be relieved from the Karma and Eternal pleasures that fakes the common soul paving the path for destiny. The Existence of God is Love. “Neyathe Ninra Nimalan”( Love is God) is the Guideline in Sivapuranam.

The following explains the first five lines of the Pathigam  


சிவ புராணம் 1-5 வரிகள்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன் அடி வாழ்க!

சிவபெருமான், உலகம் முழுவதும் பரந்துள்ள பேராற்றல். எண்ணிறந்த திருநாமங்கள் அவருக்கு உள்ளது என்றாலும் நமச்சிவாய என்னும் திருநாமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தன்னை ஆட்கொள்வதற்காக உருவமற்ற ஒளிவெள்ளம் மனித உரு எடுத்ததுபெருங்கருணைப் பேராற்றல் தன்பொருட்டாக இப்படி வந்ததை நினைத்து, ‘நமச்சிவாய வாஅழ்கஎன்றார்.






23 June 2017

Aanma Journey - Part 3 ஆன்ம யாத்திரை - பகுதி 3


ஆன்ம யாத்திரை - பகுதி 3 


ஒரு செல் தாவரத்திலிருந்து பிறந்து பிறந்து உயிர், இளைத்துக் களைத்தது. இறைவன் தனக்கு அருளிச் செய்த அருளிப்பாடே மனிதப் பிறவி எனச் சிந்தித்தது. எத்தனை எத்தனை துன்பங்களிலிருந்து இறைவன் தன்னைப் பிழைக்க வைத்தான் எனச் சிந்தித்தது.


"
யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும்,
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;" 


தாயார் கருப்பையில் தான் புகுந்ததை ஒரு யாத்திரையாகவே சித்தரிக்கின்றார் மணிவாசகர். எறும்பு என்னும் உடலில் இருந்து யாத்திரையைத் துவங்கிய உயிர் யானை வரை தனது யாத்திரையை நிறைவு செய்தது. சிறிய உருவத்தில் இருந்து மிகப்பருமனான உயிர் வரை யாத்திரை செய்தது.
கால் நடையாகப்பிறந்த உயிர் மனிதனாக உரு எடுத்ததும், தான் காப்பாற்றப்பட்டதை எண்ணி வியக்கின்றது. ஒவ்வொரு மாத வளர்ச்சியும் ஒரு யாத்திரை என்பதை உணருகின்றது. இதனை

"
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தம்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும் 
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊர் அலர் பிழைத்தும்"

என்று ஒவ்வொரு மாதமும் கருவின் யாத்திரையைப் பதிவு செய்கின்றார் அடிகள்
குழந்தையின் யாத்திரை ஒவ்வொரு படித்தரமாக வளருகின்றது.



ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தசமதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்"


முழுவளர்ச்சி பெற்ற குழந்தை, இப்பூமிக்கு அதன் யாத்திரை துவங்கும் போது தாயின் பேறு கால வலியை "துக்கசாகரம்" என்று குறிப்பிடுகின்றார். கடல் அளவு, நீள, அகல, ஆழம் காண முடியாத துக்கம் தாய்க்கும், சேய்க்கு துயர சாகரமும் உண்டாகின்றது. தாயும் சேயும் துக்க சாகரத்தையும், துயர சாகரத்தையும் அனுபவிப்பதிலிருந்து பிழைக்க வேண்டும்.


குழந்தையின் யாத்திரை ஒவ்வொரு படித்தரமாக வளருகின்றது.

"
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இறுதியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்".

காலையில் இயற்கை உபாதிகளான மலஜலத்திலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், கடும் பகல் வேளையில் பசியிலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், நிசிவேளையில் நித்திரையிலிருந்து பிழைக்க வைத்தார் என்றும், தனது வாழ்க்கை யாத்திரையில் தான் சந்தித்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் அடிகள்.







---யாத்திரை தொடரும்.

18 June 2017

Knowing yourself - தன்னை அறிதல்

தன்னை அறிதல்

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வெளியே பகை உள்ளது என்றும், அப் பகைவர்களை அழிப்பதற்கு என்ன என்ன யுக்திகள், தந்திரங்கள் கையாண்டு அவற்றை வெல்வது என்றும் சிந்திகின்றான்இதில் தனி மனிதன் அவனது தகுதிக்கு ஏற்றவாறும், நாடுகள் அவற்றின் தகுதிக்கு ஏற்றவாறும், வல்லரசுகள் அதன் அதன் தகுதிக்கு ஏற்றவாறும் ஆயுதங்கள் செய்து நாம் தான் வெல்லவேண்டும், வேறு யாரும் வென்று விடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளார்கள்வள்ளல்பெருந்தகை இவற்றை எல்லாம் கவனிக்கின்றார்


  “ தன்னை அறிந்து இன்பமுறு வெண்ணிலாவே
 ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே …”


என்று இதனைக் குறிப்பிடுகிறார். தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம். நம் உட் பகைவர்களை வெல்லலாம் என்பதே வள்ளல் கூறும் அறிவுரை.


உன்னையே நீ வெல்வாய்


                நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர்களை வெல்லவேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளீர்களே! உங்களை உள்ளும் புறமும் அரித்துத் தின்று செல்லரிக்க வைக்கின்ற உள் பகைவனைப் பற்றிச் சிந்தித்தீர்களா?  என்று வினாவுகின்றார். இதிகாசங்கள் புராணங்கள் நமக்கு நிறைய அறிவு புகட்டுகின்றது. சிறிய கதை முதல் பெரிய காப்பியம் வரை மனிதன் எப்படி வாழவேண்டும் என்றும், அப்படி வாழத் தவறினால் என்ன நடக்கும் என்றும் புரிய வைத்தன.


                ஹிட்லர், முஸோலினி போன்றவர்கள் நாட்டை ஆண்டார்கள் வெற்றி கொண்டார்கள்ஆனால் அவர்கள், அவர்களது மனத்தை ஆளுமை செய்யத் தவறி விட்டார்கள்அது மட்டுமா! புராண வரலாறு கூறும் கதை என்ன? “வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்உடைய மிகச்சிறந்த வீரன் இராவணன். அவன் அனைத்து தேசங்களையும் வென்றது மட்டுமல்ல. வானியல் சாஸ்திரத்திலும் கற்றுத்துறை போகியவன்முப்பத்து முக்கோடி வாழ்நாள் வரம் பெற்றவன்சாம கானம் மீட்டத் தெரிந்தவன். நவக் கிரகங்களையும்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். பூலோகம் முழுவதையும் வென்றான். எல்லாம் தெரிந்திருந்தான். அடுத்தவனை வெல்வது எப்படி என்று சதாவும் யோசித்துக் கொண்டிருந்த அவன் ஒன்றைத் தெரியாமல் விட்டு விட்டான்எதைச் செய்தால் தன்னை அறியலாம்; எதைச்செய்தால் தமது மனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதைத் தெரியும் வகையை அவன் அறியவில்லை.


                புறப்பகை மட்டுமே அவனை அரித்து வந்தது. அகப்பகை பற்றிய எண்ணம் அவனது சிந்தனையைத் தூண்டவில்லை. சமுதாயம் நிலைபெற வேண்டுமானால் அகப்பகை பற்றித் தெரிந்து அதை அழிக்கவேண்டும் என்று எண்ணுகின்றது வள்ளல் மனம்


                தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்நிறை வாழ்வு பெறலாம்.