26 January 2019

Sambandhar's miracle - பையச் சென்று பற்றவும்


பையச் சென்று பற்றவும்



திருஞானசம்பந்தர் மதுரை வந்ததை அறிந்ததும் ஞானசம்பந்தரால் தங்களுக்கு எதுவும் ஆபத்து விளையுமோ என்று அஞ்சினர் அமணர்கள். அதனால் ஞானசம்பந்தர் தங்கியிருந்த அறைக்கு நெருப்பு வைத்தனர்.


“  செய்யனே திரு ஆலவாய் மேவிய
  ஐயனே அஞ்சேல் என்றருள் செய்எனைப்
  பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
  பையவே சென்று பாண்டியற்காகவே
                                              (திருமுறை 3)



     அமணர்களில் பொய் வேடம் தாங்கிய சிலர் செய்த பாதகச் செயலால் அரசனுக்கும் , நாட்டு மக்களுக்கும் பழி வந்துவிடக் கூடாது என்று ஞானசம்பந்தர் விரும்பினார்.  இந்த வினைகள் பாண்டியனைச் சென்று பற்றட்டும் என்று கூறினால் பாண்டிமாதேவியும், பாண்டிநாட்டு மக்களும் உய்வடையாமல் போய்விடக்கூடும் என்று விரும்பினார் ஞானசம்பந்தர். சரணம் என்று அடைந்தவர்களைப் பாதுகாக்கும் நீ பாண்டிநாட்டு மக்களையும் காக்கவேண்டும் என்று வேண்டினார்;. அதனால் பையவே சென்று பாண்டியனைச் சாரும்படியாக ஏவினார்.

     அத்தீத்தழலின் வெம்மை ,  நோயாக மாறிப் பாண்டியனைச் சென்று அடைந்தது. பாண்டிய மன்னன் வெப்பு நோயால் அவதிப்பட்டான். சமணர்கள் தாங்கள் கற்ற மணி,  மந்த்ர,  மருந்துகளால் பாண்டிய மன்னனைக் குணப்படுத்த முயற்சி செய்தனர்ஆனால் நோய் குணமாகவில்லைமாறாக நோயின் தாக்கம் அதிகமாகியது.

     குலச்சிறையாரும்,  மங்கையர்க்கரசியாரும் தகுந்தநேரம் பார்த்து ஞானசம்பந்தர் மதுரை வந்திருக்கும் செய்தியையும்,  அவர் அரண்மனை வருகை புரிந்தால் வெப்புநோய் தணியும் என்றும் அரசனிடம் எடுத்து இயம்பினார்கள்.  பாண்டிய மன்னனின் மனம் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்    என்னும் நிலையில் இருந்தது. அதனால் ஞானசம்பந்தரை வரவழைக்கலாம் என்று அனுமதி வழங்கினான். ஞானசம்பந்தர் வந்து வெப்புநோய் தணித்தால் தங்களை யாரும் மதிக்கமாட்டார்கள் என்று சமணர்கள் கருதினர். அதனால் அரசனின் உடலில் ஒருபுறம் சமணர்கள் மயில் பீலி வீசுவது என்றும்; மறுபுறம் ஞானசம்பந்தர் திருநீற்றை இடுவது என்றும் முடிவாயிற்று. 

     குலச்சிறையாரும்,  மங்கையர்க்கரசியாரும் மிகுந்த மனநிறைவுடன் இருந்தனர். திருஞானசம்பந்தரிடம் சென்று அரண்மனை வரும்படி அன்புடன் அழைத்தனர். ஞானசம்பந்தரும் ஆலவாய் அண்ணலின் திருக்கருணையை மன்னன் புரிந்து கொள்ளும்படியாக இறைவன் அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டார்.


     அரசியும்,  அமைச்சரும் ஞானசம்பந்தரை மங்கள வாத்தியங்கள் முழங்க எதிர்கொண்டு அழைத்தனர். பின் அரசன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். தனியான இருக்கையில் அமரச்செய்தனர். ஞானசம்பந்தரைக் கண்டதும் வெப்புநோயின் வெம்மை சற்றே தணிந்தது. பிறகு பாண்டிய மன்னனுக்கு நம்பிக்கை வரும்படியாகவும்,  அரசனின் வெப்புநோய் தணிவதற்காகவும்  பதிகங்கள் பாடினார்.


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
 சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
 தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
 செந்துவர்வாய் உமைபங்கன் திருஆலவாயன் திருநீறு

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
 போதந் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு...                                                                            
                                                 (திருமுறை 2)


     என்ற பதிகம் பாடி திருநீறு பூசவும் வலது பக்கத்து வெம்மை தணிந்தது.  புன்மையும்,  வெம்மையும் தீர்ந்து அரசன் உடல் நலமும்,  மனநலமும் பெற்றான்.  ஆனால் இடதுபக்கம் வெம்மை அதிகமாகியது.  சமணர்கள் மயில்பீலி கொண்டு வீசினர். ஆனால் எந்தவகையிலும் வெம்மை தணியவில்லை. மாறாக வெப்பு நோயின் தாக்கம் இடதுபக்கம் அதிகமாகியது.


     அரசன் நோயின் தீவிரம் தாளமாட்டாமல் " இடதுபக்க வெப்புநோயும் நீங்களே தீர்க்கவேண்டும்"  என ஞானசம்பந்தரைக் கேட்டுக்கொண்டான். ஞானசம்பந்தரும் திருவாலவாயான் திருநீற்றைப் பூசி, அரசன் உற்ற வெப்புநோயைக் குணப்படுத்தினார். அரசன் மனம் மகிழ்ந்து தெய்வக் குழந்தையின் பாதம் பணிந்தான்.

No comments:

Post a Comment