28 August 2017

Kindness of Guru , better than motherhood - தாயினும் சாலப் பரியும் குரு

தாயினும் சாலப் பரியும் குரு

                கபீர்தாஸ் என்னும் மகான் இருந்தார்இவர் தனது குருவின் திருவருளை தமக்குள் அனுபவித்தவர்அதனால் அவர் கூறுகிறார்குருவும், இறைவனும் எனக்கு முன்னால் வந்து நிற்பதாக வைத்துக்கொள்வோம். யாரேனும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கடவுள் வேண்டுமா? குரு வேண்டுமா? என்று கேட்பதாக இருந்தால் நான் குருவைத்தான் தேர்வு செய்வேன் என்கிறார்அவரே விளக்கமும் கூறுகிறார்


                குருநாதர் தாயைப் போல. தெய்வம் தந்தையைப் போல. ஒரு குழந்தை மல ஜலம் கழிப்பதாக இருந்தால் தாய் எந்தவிதமான அருவருப்பும் காட்டாமல் குழந்தையைச் சுத்தி செய்து வைத்துக்கொள்வாள். மலம் நீக்கப்பெற்ற பிறகு தந்தை குழந்தையை வாரி அணைத்துக் கொள்வான்;.  இதேபோல்தான் ஆணவம், மாயை, கன்மம் இவை நிறைந்த உயிர்களை அள்ளி எடுத்து அந்த உயிரின் மலங்கள் அனைத்தையும் குருநாதர் களைந்துவிடுகிறார்அதன்பிறகு இறைவன் திருவடிப் பேற்றினை அளிக்கின்றார்.


சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட  அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவேஎன்று குருநாதர் சித்தமலம் அறுத்த பிறகு, சிவபெருமான் ஏன்று கொள்கின்றான் என்கின்றார்ஒரு ஜீவனுக்கு குருவின் தயவு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்த ஒளவைப் பாட்டியும் தனது விநாயகர் அகவலில் குருவின் பெருமையைக் கூறுகிறார்.


                குருவடிவாகிக் குவலயம் தன்னில்
                திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
     வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளி

                                (விநாயகா் அகவல்)
               


                நீ எனக்குக் குருவாக வரவேண்டும்ஏனெனில் நீதான் எனக்குத் தாயாய் வந்து களைவன களைவாய்நீதான்  எனது மாயாப் பிறவி மயக்கம் அறுப்பாய்நீ குருவாக வந்தால்தான் நான் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காணமுடியும்நீ குருவாக வந்தால்தான் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காணமுடியும்முழுமுதல் பொருளே நீ குருவாக வந்தால்தான் குண்டலி அதனின் கூடிய அஜபாவைத் தெரியமுடியும்விநாயகக் கடவுளே நீ குருவாக வந்தால்தான் அமுத நிலையும், ஆதித்தன் இயக்கமும் அறியமுடியும். வாக்கும், மனமும் இல்லா மனோலயம் தேங்கவேண்டுமானால் நீ குருவாக வரவேண்டும் என்று ஒளவைப்பாட்டி பிரார்த்தனை செய்கின்றார்.


மின்னலென வரும் காட்சி



                ஒளவைக்கு விநாயகர்தான் இஷ்டதெய்வம். விநாயகர் தனக்குக் காட்சி கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றார் ஒளவைப் பாட்டி. எப்போதாவது கிடைக்கும் பொருளைத்தான் அரியபொருள் என்போம்ஒரு பொருள் நமக்குச் சுலபமாகக் கிடைத்துவிட்டால் அதன் அருமை பெருமை நமக்குத் தெரியாமல் போய்விடும்அதனால் இறைக்காட்சியோ, இறை உணர்வோ நம்மிடம் தோன்றி மறையும் அளவுதான் நிற்கும். இதைத்தான் எல்லா அடியவர்களும் பாடியுள்ளார்கள்.


கண்மூடி ஒரு போழ்து மௌனமாய் இருக்க என்றால்
 பாழ்த்த கன்மங்கள் போராடுதே”    
                                                                                     (தாயுமானவ சுவாமிகள்)


                இப்படியாகத் தோன்றி மறைந்த அனுபவங்களைக் கொண்டுதான் அருளாளர்கள் நினைந்து நினைந்து உருகியிருக்கிறார்கள்.


                குருநாதர் தெய்வத் திருவுருவிலோ, அனுபவமாக உள் உணர்விலோ நின்று உணர்த்துவதாக இருந்தால் பிரிவும், கூடுதலுமாகிய அனுபவம்தான் கிடைக்கும்அதே சிவபெருமான் குருநாதர் திருவுருவில் வந்தால் நமது மலங்கள் கெடுத்து ஆட்கொள்வான்.


                சிவபரம்பொருள் கோகழி ஆண்ட குருமணியாக மாணிக்கவாசகருக்கு வந்ததுசிவபெருமான் அருவமானவர்;   உருவமானவர்அநாதியானவர்;   சோதிப் பிழம்பானவர். மாணிக்கவாசகர் பொருட்டு திருப்பெருந்துறையில் குருமணியாக வந்தது. குருமூர்த்தமாக வந்ததால்தான் அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. உணர்த்த உணர்தல்தான் சீவனின் இயல்புஅதனால் சிவபெருமான் குருவாக வந்து உணர்த்துகின்றார்வழிää துறை தெரியாமல் மயங்கும் நமது கண்ணீரை மாற்றி நமது உயிரைப் பற்றியும்ää உடம்பைப் பற்றியும் நிற்கும் மலங்களைக் கெடுக்கின்றார் பெருந்துறை மேய குருநாதர்யார் தமரும் இன்றி இருந்த எனது கண்ணீரை மாற்றினான் கோகழி ஆண்ட குருநாதன் என்கின்றார்மாணிக்கவாசகர் தளர்ந்த தருணம் அவர்; தளர்வு நீக்க குருநாதர் உருவில் வருகிறார் சிவபெருமான்.



                இறைவனே ஆனாலும் குருவாகத்தான் வரவேண்டும் என்று நம் அடியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அந்த வழியில் நாமும் இறைவனைக் குருவாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

1 comment: