கரும்பு தின்னும் கல் யானை
மதுரைப் பதியில் எல்லாம் வல்ல சித்தராக சிவ பெருமான் வருகிறார். சித்தர்
வேதியல் நிபுணர்.
தனது வேதித்தல் தொழில் மூலம் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், கூன், குருடு, செவிடு, பேடு நீக்கியும் சித்தாடல் செய்து அருள் புரிகின்றார். பாண்டிய மன்னனுக்குச் செய்தி சென்றது. எல்லாம்
வல்ல சித்தராக வந்திருப்பவர் தலை சிறந்த வேதியன் என்று அரசன் அறிந்து கொள்ளவில்லை.
அரசன் சித்தரைக் காண்பதற்கு வருகிறான். எல்லாம்
வல்ல சித்தர் கோவில் வளாகத்தினுள் இருக்கிறார்.
இவர்தான் சித்தர் என்று மன்னனிடம் அமைச்சர் தெரிவித்தார்.
மன்னன் சித்தரிடம் இத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கும் போது நீர், கோவிலில் உள்ள கல் யானையை கரும்பு தின்ன வைத்தால், உம்மை எல்லாம் வல்ல சித்தர் என்று ஏற்றுக் கொள்வதாக அரசன் கூறினான். கரும்பு கொண்டு வரப்பட்டது.
கல்
யானையை சித்தர் பார்த்தார். கல்யானை
உடனே அசைந்தது. அரசன்
கையில் இருந்த கரும்பை இழுத்துத் தின்றது. மேலும், மன்னன் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையையும் இழுத்தது. அப்போது தான் அரசன் உணர்வு வரப்பெற்றான்.
தான்
செய்த தவற்றினை உணர்ந்தான்.
வேதியாய் வேத விளைபொருளாய் உள்ளவனே! நீதான் முழுமையான வேதியன். நீ
உயிரூட்டிய கல் யானை பழைய நிலையினை அடையவேண்டும். அப்படி
இல்லையானால் இயற்கையே மாறிவிடும்.
கல்
கட்டிடம் அசைய ஆரம்பித்துவிடும் என்று இறைவனை வேண்டுகின்றான் அரசன். இயற்கை
நிலை மாறாமல் ஆழ் ஆழிகரையின்றி நிலைநிறுத்த வல்ல வேதியன் வேதித்தலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பழைய நிலைக்கே கல் யானையை ஆக்கி விடுகின்றான்.
சிவனுடைய மூலக்கூறுகள் நமது உடலில் புகுந்து விட்டால் நம் உடலிலும், உணர்விலும் அநேகவிதமான இரசாயன மாறுதல்கள் நடைபெறும். அதன் மூலம்,
“தன்னையே எனக்குத் தந்து தன் அருள் ஒளியால் என்னை வேதித்த என்தனி இன்பே”என்று வள்ளல்பெருமானார் கூறுவதுபோல், தன்னைத் தந்து நம்மை வேதிக்கின்றான் அவ்வேதியன்.
Thanks Amma
ReplyDelete