17 February 2019

The all-pervasive Almighty -நனவினும் , கனவினும் நண்பனே


நனவினும் , கனவினும் நண்பனே


திருவீழிமிழலையில் கீழக் கோபுரவாசல் அருகே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர் தங்கியிருந்தார். திருநாவுக்கரசர் மேற்குப் புறத்தே உள்ள மடத்தில் தங்கியிருந்தார். சீகாழியிலிருந்து வந்த அந்தணர்கள் ஞானசம்பந்தரை மீண்டும் சீகாழிக்கு வரும்படி அழைத்தனர். இன்று கழித்து நாளை வீழிப்பெருமான் அருள்பெற்றுச் செல்வோம்; என்று கூறினார் ஞானசம்பந்தர்.

     தோணியப்பர் அன்றிரவு கனவில் தோன்றி , திருவீழிமிழலையிலேயே சீகாழிக் காட்சியினைக் (தோணியப்பராக) கொடுப்போம் என்று கூறி அருளினார்.  ஆளுடை அரசும் , ஆளுடை அடிகளும் மறுநாள் திருக்கோவில் வலம் வந்து வணங்கினர். அப்போது திருவீழிமிழலையில் சீகாழிக் காட்சியினைக் கொடுத்து அருளினான் இறைவன்.


சடையார் புனல் உடையான் ஒரு சரிகோவணமுடையான்
 படையார் மழுவுடையான் பல பூதப்படை உடையான்
 மடமான் விழி உமை மாது இடமுடையான் எனை உடையான்
 விடையார் கொடி உடையானிடம் வீழிம்மிழலையே   

     
               
                                           (
திருமுறை 1)

 
     என்னை ஆளுடைய ஈசன் சீகாழியில் மட்டுமல்ல ,திருவீழிமிழலையிலும் உள்ளான் என்பதனை அனைவருக்கும் உணர்த்தினார் ஞானசம்பந்தர். பிறகு சீகாழி அன்பர்களை ஊர் திரும்பும்படியாக வேண்டிக்கொண்டு மீண்டும் திருவீழிமிழலையிலேயே வீற்றிருந்து அறப் பணிகளை மேற்கொண்டார்..

No comments:

Post a Comment