12 December 2018

How to worship - தலையால் வணங்கு


தலையால் வணங்கு

சிலைதனால் முப்புரம் செற்றவன் சீரினார்
 மலைதனால் வல்லரக்கன் வலி வாட்டினான்
 சிலைதனார் புறவணிமல்கு காட்டுப்பள்ளி
  தலைதனால் வணங்கிடத் தவமதுஆகுமே
                                
                               
                                                      (
திருமுறை 3)
   

  
தனது புன்னகையால் முப்புரம் எரித்தவன் சிவபரம்பொருள். அதுபோல் அவனை அடையவேண்டும் என்னும் தவமுடையோர் வினைகளை எல்லாம் தனது புன்னகையால் எரித்து ஏன்று கொள்ளக்கூடியவன்.  ஆணவத்துடன் மலையைப் பெயர்த்துவிடலாம் என்று எண்ணிய இராவணேஸ்வரனின் ஆணவத்தைத் தணித்து,  அவனையும் சிவபக்தனாக்கிக் கொண்டவன்.  நாமும் ஆணவத்துடன் இறைவனை அடைந்துவிடுவோம் என்று எண்ணினால், நமது எண்ணம் இறைவனை அடைவது என்பதால் , அதையும் ஏற்றுக்கொண்டு தன்னையே தருபவன் சிவபரம்பொருள். திருக்காட்டுப்பள்ளி மேவிய இறைவனை வணங்கினால் அதுவே தவமாகும்.


தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து
 தலையாலே பலிதரும் தலைவனைத்
 தலையே நீ வணங்காய்  
                              
                                   
(
திருமுறை 6)



     என்று தலையால் வணங்கினாலே தவமாகும் என்கின்றார். இருபதாம் நூற்றாண்டு இருபத்திஒன்றாம் நூற்றாண்டு மக்களைப் பார்க்கின்றார் ஞானசம்பந்தர்.  இவர்கள் இறைவனது திருக்கருணையை நினைத்து வணங்காவிட்டாலும் பரவாயில்லை ஏளனம் வேறு செய்வார்கள். அதையும் தாண்டி ஏதோ வணங்கலாம் என்று போகின்றவர்களும் கன்னத்தில் ஒரு கையால் தட்டிவிட்டு இறைவனுக்கு தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே ஒரு முத்தம் கொடுத்துச் செல்வார்கள்.  அதனால் நீங்கள் தனியாகத் தவம் செய்யவேண்டாம். திருக்கோவில் வளாத்திற்குள் நுழையும்போது தலையால் வணங்கினால் அதுவே ஒரு தவம்தான். 


கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
  தலையினால்  வணங்குவார் தவமுடையார்களே      


                       
                                (
திருமுறை 3)



     இறைவனைத் தலையினால் வணங்கினால் மட்டுமே தவமுடையவர்களாக ஆகும் பேறும் கிடைக்கும் என்கின்றார் ஞானசம்பந்தர்.

No comments:

Post a Comment