9 June 2018

ஐந்தெழுத்தின் வலிமை - Power of Namasivaya Mantra


ஐந்தெழுத்தின் வலிமை


     அல்லல் படை வாராமல் காப்பதற்காகப் படைஎழுச்சி செய்கிறார்கள் அருளாளர்கள். வான ஊர் அடையவேண்டும் என்பது ஒவ்வொரு உயிரின் இலக்காக இருக்கவேண்டும். வான நாட்டினைக் கைப்பற்றச் செல்லும்போது எதிரிப்படைகள் வந்து நம்மைத் தாக்கும். அவற்றினை வெற்றி கொள்ள வேண்டுமானால் , நீற்றுக்  கவசம் அணிய வேண்டும்.


படைக்கலங்கள் எவை எவையாக இருக்கவேண்டும் என்று பாடுகின்றார்.  படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் இருக்கவேண்டும். 

     படைக்கலமாகக் கொண்ட எழுத்து ஏதோ உதட்டளவில் முணுமுணுப்பது அன்று. ஐந்து எழுத்து ஊனோடும், உயிரோடும்,உணர்வோடும் ஒன்றி இருக்கவேண்டும்.
ஒரு
கிளிக் கதை கூறுவார் இராமகிருஷ்ண பரமஹம்சர்ஒருவன் கிளி வளர்த்தான். அந்தக் கிளிக்கு இராம நாமம் பயிற்றுவித்தான். சொன்னதைச் சொல்வதுதானே கிளிப்பிள்ளையின் இயல்பு. அதனால் இராம இராம என்று கூறிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பூனை கூண்டின் அருகே வந்ததுஇதுவரை இராம நாமம் கூறிவந்த கிளி கீ கீ என்று கத்தியது. உயிர்ப் பயம் வரும்போதும் இராம நாமம் கூறவேண்டும். ஆனால் அப்போது அது கீ கீ என கத்தியது. ஏனெனில் ஊனோடும், உணர்வோடும் ஊறவில்லை அந்த நாமம்அதனால் மரண பயம் வந்ததும் கீ கீ என்றது. நாவுக்கரசரை நீற்றறையில் போடும்போதும்கல்லில் பிணைத்துக் கடலில் எறியும்போதும் அவற்றை எதிர் கொண்டது திருநாமம்தானே.

     ஒரு அரசன் அழைத்து வரும்படி ஆணை இடுகின்றான்.  ஆனால் அந்த ஆணையைப் பார்த்து பயம் கொள்ளாமல் நாம் யார்க்கும் குடியல்லோம் என்று தெளிந்த சிந்தனையுடன், தீரமுள்ள நெஞ்சுறுதியுடன்; கூறினார் என்றால், அரசனை விட மேலான படை பலம் இவரிடம் இருந்திருக்க வேண்டும். அந்த படைபலம் தந்த துணிவினால்தான் நாம் யார்க்கும் குடியல்லோம் என்றார். அந்த படைபலம் உன் நாமத்து எழுத்து அஞ்சு என்று ஐந்தெழுத்தின் வலிமையைக் கூறுகின்றார்.

     சாம்பார் மற்றும் புளிக்குழம்பு சமைக்கும் பாத்திரத்தில் பால் காய்ச்சினால் பால்  திரியும்.  அப்பாத்திரத்தில் உள்ள புளி, உப்பு அப்பாத்திரத்தில் ஊற்றும் பாலைத் திரித்து விடும்அதனால் பால் பாத்திரம் தனியாக இருக்கும்பூஜைக்கென உள்ள பஞ்ச பாத்திரத்தினையும் அதன் புனிதம் கருதி ஏனைய உபயோகத்திற்குப் பயன்படுத்தமாட்டார்கள்இறையடியவா்களும் தங்களது மனதின் உணா்வின் புனிதத்தைக் காப்பாற்றிக் கொள்ள மனதிற்குள் ஐந்தெழுத்தையே படைக்கலமாகக் கொண்டார்கள்மனதிற்குள் ஏனைய சிந்தனைகள் புகுந்தால் அது இடைக்கலமாகும்எண்ணச் சிதறல்களால் மனம் திரிய வாய்ப்புண்டுஅதனால் மனமாகிய கலம் இறையனுபவத்தைத் தவிர பேறு ஒன்றைப் பற்றாமல் இருப்பதற்கான கருணையை இறைவன் அருளியுள்ளான்.



No comments:

Post a Comment